சூடான செய்திகள் 1

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது

(UTV|COLOMBO) கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு நேற்று  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர அவர் குறிப்பிட்டார்.

புதிய காத்தான்குடியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்