அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

இன்று (13) காலை மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மீது இனந்தெரியா சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

 ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் – மருத்துவ இராஜாங்க அமைச்சர்

அ.கா.சபை உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

மத்திய வங்கியின் 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor