தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், எம்பிலிபிட்டிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (22) பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
