தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம் இன்று (21) மாலை கையளித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
