உள்நாடு

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இதற்கான யோசனைகளை வழங்குவதற்கு விசேட செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வித் துறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்சமயம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரம் வரை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி அநுர

editor

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை