உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் விசாரணைக்குழுவில் முன்னிலையானார்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (19) விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று (19) குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதற்கமைய அவர் இன்றைய தினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

இலங்கை பெண்களே அவதானம் – மார்பகப் புற்றுநோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

editor

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை