உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பதிலடி

editor

அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள்

“இன்றும் போராடவுள்ள ஆசிரியர், அதிபர்கள்”