உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேக நபர் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தினை சோதித்து பார்த்ததிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரிய வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கனடா கொலை சம்பவத்தில் நகர மேயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

துசித ஹல்லொலுவ வின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் – சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு

editor