உள்நாடு

தீயினால் முற்றாக எரிந்த வீடு – உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

களுத்துறை, வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் விபத்து – 13 பேர் காயம்

editor