விளையாட்டு

தில்ஹாரவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை 8 வருட தடை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) 8 வருட தடை விதித்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவருக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான தடை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மிதாலி ராஜ் சாதனை

இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று