சூடான செய்திகள் 1

திருமலையில் மீண்டும் ஆலயம் உடைப்பு

(UTV|COLOMBO)- திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவம் கடந்த திங்கள் முதல் இடம்பெறுவதாக ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.

கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார்.

Related posts

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம் (பட்டியல் இணைப்பு)