உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (23) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) எம்.எச்.எம். அரபாத் , கணக்காய்வு அத்தியட்சகர் என்.ஜி.என். ரத்னஸ்ரீ, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ( நிகழ்நிலை), அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் (நிகழ்நிலை) , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்

Related posts

உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம் – அது நாம் விரும்பி ஏற்றுள்ள பொறுப்பு – அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்

editor

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor