உள்நாடு

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நுவரெலியா மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1,200 முதல் 1,300 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக மரக்கறி வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

எரிவாயு விலை தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

editor