உள்நாடு

தானிஸ் அலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கடந்த 13ஆம் திகதி ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, கடந்த 26ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

editor

கோட்டா கூறியதை மறுக்க முடியாது – மீண்டும் கார்டினல்

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு