உள்நாடு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று

(UTV | கொழும்பு) – சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய இன்று(11) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன், இம்முறை 331,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

பிள்ளையானுடன் கலந்துரையாட ரணில் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு – உதய கம்மன்பிலவுக்கு அனுமதி – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!