உள்நாடு

‘தரம் 05 பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வேண்டாம் என கல்வி ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வெட்டுப்புள்ளி மதிப்பெண்களை வழங்குவதன் மூலம் குறிப்பாக, பெற்றோருக்கு தங்கள் குழந்தை விரும்பும் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும் என்று குழுவின் பெரும்பான்மையினர் சுட்டிக்காட்டினர்.

தற்போது 05ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

editor

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor

இலங்கையில் பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

editor