உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மேலும் 298 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு) யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் இன்று(09) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தனிமைப்டுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று(09) காலை அங்கிருந்து வெளியேர அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

ஏப்ரல் 3ம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானம் இல்லை

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

editor

பொலிஸாரின் துப்பாக்கிகளைப் பறித்து சுட முயன்ற கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை | வீடியோ

editor