உள்நாடு

தனிமைபடுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இரணைமடு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 126 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து இன்று(23) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 373 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களுக்கும் விஷேட பாதுகாப்பு!

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை..!

இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை