வகைப்படுத்தப்படாத

தனது மகளை 10 வருடங்களாக துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இளம் வயது முதல் சுமார் 10 வருடங்களாக  தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று கடுமையான வேலையுடன் கூடிய 45 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதற்கு மேலதிகமாக , அவரது மகளுக்கு மூன்று இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் மற்றும் 30 ஆயிரம் ரூபா அபராதமும் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் அவரின் சிறைத்தண்டனையை மேலும் 6 வருடம் நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்?

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை