உலகம்

டொங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்குட்பட்ட பொலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டொங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொங்கா தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் இன்று (30) 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் அபாயகரமான சுனாமி அலைகள் டொங்கா கடற்கரையில் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள் (186 மைல்) ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இநத நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

Related posts

ஓமானில் மசூதி அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பலர் காயம்.

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

editor

227 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் – நடந்தது என்ன

editor