உள்நாடு

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – டீசல் பற்றாக்குறையால் நாடளாவிய ரீதியில் பேரூந்து சேவைகளை 10 வீதத்தால் குறைக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் இல்லாத பட்சத்தில் பேருந்துகள் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமையாக இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை இயக்குவதற்கு தேவையான டீசல் இருப்புக்கள் போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் இரு வார பயிற்சி

editor

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது