அரசியல்உள்நாடு

ஜேர்மன் தூதரக புதுவருட வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்

புது வருடத்தை முன்னிட்டு ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு கடந்த 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்.

இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) அவர்களால் 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி கொழும்பு 3, அல்பேர்ட் ஹவுஸ் மாவத்தையில் அமைந்துள்ள ஜேர்மன் தூதுவரினது இல்லத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜேர்மன் தூதுவர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் இவ்வைபவத்தில் பங்கேற்றார்.

ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வைபவத்தில் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – மேலும் மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

editor

எகிறும் ‘டெங்கு’