சூடான செய்திகள் 1

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார்.

மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும், விஷேடமாக நகர் புறப் பகுதிகளிலும் ஜூம்ஆத் தொழுகையை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டில் அசாதார சூழ்நிலைய ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது