உள்நாடு

ஜூன் 21 வரையில் இத்தாலி செல்லத் தடை

(UTV |  இத்தாலி) – இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.

இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ஒழிக்க நினைக்கும் ஜே.வி.பி. கூட்டங்களுக்காக கோடி செலவு – மாற்றங்களுக்காக மக்களை பலிக்கடாக்களாக்காதீர்” – தலைவர் ரிஷாட்!

editor

பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்