உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும், இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் Matthieu John இந்நிகழ்வில் பங்கேற்றார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

முன்னாள் எம்.பி ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

MV Xpress pearl : எண்ணெய் கசிவுத் தகவல் இல்லை