உள்நாடு

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபராக ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார்.

காலி பிரதான நீதவான் இன்று(17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீராக்கல் மனுவொன்றின் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Related posts

லிட்ரோ இன்றும் இல்லை

“உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம்”

குடிநீரில் இரசாயணம் கலந்துள்ளதா ? பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்

editor