உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையான 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின், இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்கிழக்குப் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட 22 மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

editor

UPDATE – ராகலை தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட ஐவர் பலி

திருடர்களுடன் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்பதால் தான் நாம் பொறுப்பை ஏற்கவில்லை – சஜித்

editor