அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தீர்மானத்தை இடை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, குறித்த மானியம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த மானியம் வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள்

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹர்ஷான் டி சில்வாவுக்கு விளக்கமறியல்

editor

வவுனியாவில் இரு இன இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் காயம்