உள்நாடு

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள்

ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை 1,382 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்