உள்நாடு

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

(UTV| கொழும்பு) – கல்கிஸ்ஸ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸார் கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸார் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இதன்போது  இன்று அதிகாலை 12.03 மணி அளவில் பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்து திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு யாப்பில் இடமிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

editor

நற்சான்றுப் பத்திரத்தை கையளித்த இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்!

ஊழல்வாதிகள் கடுமையாக கலக்கமடைந்துள்ளார்கள் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor