உள்நாடு

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (4) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய விலைகள் நாளையதினம் (4) அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் (மே) 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 175 ரூபாவினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 70 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 32 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது. 12.5 கி.கி. சிலிண்டரின் விலை 3940 ரூபாவாகவும்,5 கி.கி சிலிண்டரின் விலை 1582 ரூபாவாகவும்,2.3 கி.கி சிலிண்டரின் விலை 740 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Related posts

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – நிசாம் காரியப்பரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

editor