வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இம்முறை இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணிகள் மத்தியில் 25 சதவீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

 

 

Related posts

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்