உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரயில் பாதைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, வெள்ள நிலை காரணமாக பிரதான பாதையில் கொழும்பில் இருந்து பொல்கஹவெல வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் மற்றும் புத்தளம் இடையிலான புகையிரத சேவைகளும் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய

editor

மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய வேன் – 11 பேர் காயம்

editor

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு