உள்நாடு

சிவனொளிபாத மலையில் 150 இளைஞர்கள் கைது

(UTV|ஹட்டன்) – சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த யாத்திரைக்கு சென்ற சுமார் 150 இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சுலனி வீரரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 110 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 பேருக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றம் முன்னிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளுடன் வருபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை – ஒருவர் கைது

editor

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

editor

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி