உள்நாடு

சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படும்.

அத்துடன் இதனை இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான உரிய வயதினர் குறித்து சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குழு தீர்மானித்தன் பின்னரே, சினோபார்ம் தடுப்பூசி இலங்கையர்களுக்கு ஏற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் குறைவு

கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைது

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை