உள்நாடு

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 491 பேர் கைது

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க அரசிடம் நிதி இல்லை

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று