உலகம்

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவில் நிலநடுக்கம்

editor

சீனா ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா

காஸாவில் யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்

editor