விளையாட்டு

சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஒகுஹரா

(UTV | டென்மார்க் ) –  டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் நஜோமி ஒகுஹரா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஒகுஹரா 2 ஆண்டுக்கு பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஆண்கள் பிரிவில் சக நாட்டவரான ரஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி டென்மார்க்கின் ஆன்டோன்சென் மகுடம் சூடிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

விதுஷா லக்ஷானியின் பதக்கத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி