உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து – ஒருவர் காயம்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அம்பலாங்கொடை பகுதியில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு வரும் போதே சாரதியின் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அருகில் உள்ள சுவரில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்விபத்தில் 41 வயதுடைய சாரதி காயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

பௌத்த தர்மத்தின் பாதையில் சென்று மீண்டும் தன்னிறைவு பெற்ற நாடாக முன்னேறுவோம் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor