உள்நாடு

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 50  வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் இரு பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

எம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பின் எவ்வித பிரச்சினையும் இல்லை

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மண் கடத்தல் : டிப்பர் சாரதி தப்பிப்பு – டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது!