உள்நாடு

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நடந்தால் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து நாடு எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என உள்ளக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அவ்வப்போது மூடப்படுவதால் அதன் உயிர்ச்சக்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கச்சா எண்ணெய் தாங்கி ஒன்று நங்கூரமிட்டு பல நாட்களாகியுள்ளதாகவும் அதனை கொள்வனவு செய்யாவிட்டால் நிலைமை மோசமாகும் எனவும் எண்ணெய் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இது குறித்து எரிசக்தி அமைச்சக வட்டாரத் தகவல்கள்படி, ​​சுத்திகரிப்பு நடவடிக்கைக்கான கச்சா எண்ணெயை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது நாளொன்றுக்கு 350 மெற்றிக் தொன் பெட்ரோல், 750 மெற்றிக் தொன் டீசல், 1300 மெற்றிக் தொன் எரிபொருள் மற்றும் 550 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் ஆகியவற்றைச் செயலாக்குகிறது.

Related posts

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது – ஆறு மாத காலத்துக்குள் குறை கூற முடியாது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்