சூடான செய்திகள் 1

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

 

 

 

 

Related posts

ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை -ஹரீன்

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் ஜனாதிபதி ரணில்! காசோலையும் கையளிப்பு

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!