உள்நாடு

சந்தையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை!

சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள வெற்றிலை கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய வெற்றிலை ரூ. 10 ஆகவும், கம்பி வெற்றிலை ரூ. 8 இற்கும், சிறிய வெற்றிலை ரூ. 7 இற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, 40 வெற்றிலை கொண்ட ஒரு கட்டு ரூ. 350 – ரூ. 450 வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரித்ததால் அன்றாட வர்த்தகம் வேகமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

editor

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை