உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான முறையில் 23 வயதுடைய யுவதி உயிரிழப்பு!

நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை