உள்நாடு

சட்டவிரோதமான முறையில் முகநூல் விருந்து – 34 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சட்டவிரோதமான முறையில் முகநூல் விருந்து – 34 பேர் கைது

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

இதில், சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குழு நடத்திய சோதனையில் கஞ்சா,ஐஸ் மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சந்தேகநபர்கள் குழுவொன்றை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகை சுற்றிவரும் வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி இலங்கையை வந்தடைந்தார்

editor

அறுபது தாண்டியோருக்கு பூஸ்டருக்கு அனுமதி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடு!