மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
