வகைப்படுத்தப்படாத

சட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது

(UTV|COLOMBO)-ஆளும் அரசாங்கம் செல்வாக்குள்ளவர்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்ப்படுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனால் சட்டம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை உடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

எவன்காட் சம்பவம் தொடக்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினர் வரையில் சட்டத்தை அமுல்ப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Rishad says “Muslim Ministers in no hurry to return”

நெதர்லாந்தின் பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரி கட்சி வெற்றி!

பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழு கலைக்கப்பட்டது