அரசியல்உள்நாடு

சஜித்தை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்களினது பிரதிநிதிகள்

தமது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவிக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

அவ்வாறே, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்றைய தினம் சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

இவ்விடயங்களை பாராளுமன்றத்தில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு உறுதியளித்தார்.

Related posts

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை – இருள் சூழ்ந்த நிலை குறித்து விளக்கம்

editor

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்