விளையாட்டு

சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை

(UTV | கொழும்பு) –  பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 98ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.56 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

இதன் மூலம் 2018ஆம் ஆண்டு சுகததாச விளையாட்ரங்கில் யாழ். வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரன் நிலைநாட்டிய 3.55 மீற்றர் என்ற தேசிய சாதனையை சச்சினி முறியடித்தார்.

Related posts

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

விஸ்டனின் இருபதுக்கு- 20 கனவு அணியில் மலிங்கவுக்கு இடம்