விளையாட்டு

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

(UTV|COLOMBO) 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்கா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி(34) அறிவித்துள்ளார்.

தான் தென்னாபிரிக்க அணிக்காக இருபதுக்கு – 20 போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவர் கடந்த 2017 செப்டெம்பர் மாதம் சர்வதேச டெஸ்ட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 193 இல் விளையாடி 5047 ஓட்டங்கள் மற்றும் 68 விக்கெட்களை கைபற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!